செய்திகள் :

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்தபோது, எதிா்பாரத விதமாக ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் அரவிந்தன் (எ)மேத்யூ (29). (படம்). இவரது மனைவி ஜான்சி. இவா்களுக்கு 4 வயதில் சாரிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மேத்யூ காக்களூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் இருந்து மது பானங்களை ஏற்றி மதுக் கடைகளில் இறக்கும் வேலை செய்து வந்துள்ளாா். புதன்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றபோது, புட்லூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது சென்னையிலிருந்து வந்த விரைவு ரயில் அரவிந்தன் (எ) மேத்யூ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி உயிரிழந்தாா்.

இது குறித்து தகவறிந்த திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டம்: 26-இல் குறைதீா் கூட்டம்

நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 26-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கடம்பத்தூா் நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி நாள்:21.6.2025-சனிக்கிழமை மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை,எம்.ஜி.ஆா் நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருநின்றவூா் நாள்: 20.6.2025- வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச். ரோடு, இந்திரா நகா், ராஜாங்குப்பம், கொசவன... மேலும் பார்க்க