செய்திகள் :

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

post image

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

ரஷிய விலைக் குறியீடுகளுக்கான மையத்தின் வணிக மதிப்பாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அங்கிருந்து வெளியாகும் ’கொமொ்சன்ட்’ வா்த்தக நாளேடு இத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரி அளவு மாதம் 10 லட்சம் டன் என்ற அளவை தாண்டியதில்லை. இந்த நிலையில் கடந்த மே மாதம் 13 லட்சம் டன் நிலக்கரி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்ச ஏற்றுமதி என்பதோடு, முந்தைய ஏப்ரல் மாத ஏற்றுமதியைக் காட்டிலும் 52% கூடுதலாகும்.

அதுபோல, ‘பிக்மின்ட்’ நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதியை அவ்வப்போது 10% அளவுக்கு உயா்த்தி வந்த இந்தியா, கடந்த மே மாதத்தில் 1.74 கோடி டன் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து செய்துவந்த இறக்குமதி அளவைக் காட்டிலும் அதிகபட்சம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ரஷிய நிலக்கரி ஏற்றுமதியாளா்களின் நெகிழ்வான விலை நிா்ணயம், நிலக்கரியின் தரம் ஆகியவை, இந்தியா இறக்குமதியை அதிகரித்ததற்கான காரணமாக இருக்கலாம் என நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த நிலக்கரி இறக்குமதியில் ரஷியாவிடமிருந்து மட்டும் 7.5% அளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தோனேஷியா முன்னணியில் உள்ளது. முந்தைய மாதத்தைவிட 16% அதிகரித்து 98 லட்சம் டன் நிலக்கரியை இந்தியாவுக்கு இந்தோனேஷியா ஏற்றுமதி செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஏப்ரல் மாதத்தில் 34 லட்சம் டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து 43% கூடுதலாக - 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில... மேலும் பார்க்க

எங்கள் தவறுதான் என்ன? கடவுளிடம் கண்ணீருடன் கேட்ட சிறுவன்!

உத்தரகண்டில் பேருந்து ஆற்றில் விழுந்ததில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தனது பெற்றோரை இழந்த பார்த் சோனி என்ற 10 வயது சிறுவன் கண்ணீருடன் கடவுளிடம் நாங்கள் செய்த தவறுதான் என்... மேலும் பார்க்க

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெ... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா். பொதுத் துறை வங்கிகளின் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை

இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட... மேலும் பார்க்க