செய்திகள் :

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!

post image

ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இதனால், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, 2 வது நாள் இரவாக நேற்று (மே.5) ரஷியாவின் மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷியாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களினால் ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தகவல்கள் யாவும் உறுதிச் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் ரஷியா உள்ளிட்ட நேச நாடுகள் நாஜி ஜெர்மனியை வெற்றிக்கொண்ட நாள் வரும் மே.8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதனால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மே.8 முதல் 72 மணிநேர போர்நிறுத்தத்தை அறிவித்திருந்த சூழலில் இந்தத் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!

யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதுமாகத் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!

யேமனின் தலைநகரிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கடந்த மே.4 ஆம் தேதியன்று ... மேலும் பார்க்க

ஜெர்மனி பிரதமராக ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தேர்வு!

பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி, ஜெர்மனியின் பிரதமராக பதவி வகித்த ஓலாஃப் ஷோல்ஸின் ‘சோசியல் டெமாக்கிரட்ஸ்’ கட்சி தோல்வியடைந்தது.எத... மேலும் பார்க்க

புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான சிக்னல் துண்டிக்கப்படவுள்ளது.நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத... மேலும் பார்க்க

எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!

ஜம்மு - காஷ்மீரில் கிட்டத்தட்ட 200 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையில் வசிக்கும் விவசாயிகள் அறுவடையை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.... மேலும் பார்க்க

செனாப் ஆற்றில் நிறுத்தப்பட்ட நீரால் கரீப் சாகுபடி பாதிப்பு: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் சிந்து நதிநீர் வாரியத்தின் ஆலோசனைக் குழுவானது, செனாப் ஆற்றில் நீர்வரத்தை இந்தியா நிறுத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் கோரிக்கை

மாஸ்கோ: இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்று ரஷியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷிய வெளியுறவ அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷா... மேலும் பார்க்க