செய்திகள் :

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

post image

ரஷியாவின் ஆளில்லா சிறிய ரக விமானங்களில் (ட்ரோன்கள்) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானில் வடிவமைக்கப்பட்டு ரஷிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன்கள், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன்களின் உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டை உக்ரைன் முன்வைத்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டுவரும், ஷாஹெட் 136 ஆளில்லா போர் வான்வழி விமானங்களில் இந்த உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் தரப்பு வெளியுறவுத் துறை மூலம் முறையாக இது குறித்து இரு முறை தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த விஷே இன்டர்டெக்னாலஜி நிறுவனத்துக்குச் சொந்தமான மின் திருத்திகள் (E300359) இந்த ட்ரோன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆரா செமிகன்டக்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாமர்கள், ட்ரோன்களின் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது,

''இந்தியாவின் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான உள்நாட்டு சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய ஏற்றுமதிகள் நமது எந்தச் சட்டங்களையும் மீறவில்லை என்பதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க |அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: டிரம்ப்

Ukraine flags Indian-made parts in drones used by Russian forces

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் கொள்ளை போகின்றன! - ஐ.நா தகவல்

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய லாரிகள், இடையிலே வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிற... மேலும் பார்க்க

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

மனிதத் திறமைக்கான எல்லையை செய்யறிவு மிக வேகமாக மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மிகச் சிறப்பாக செயலாற்றக் கூடிய இளைஞர்களுக்கு இன்னமும் உலகில் தேவை இருக்கிறது என்பதையே, மத் டெய்ட்கேவின் செய்தி க... மேலும் பார்க்க

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

ரஷியாவிடம் இருந்து அமெரிக்காவும் இறக்குமதி செய்வதாக இந்தியா எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யு... மேலும் பார்க்க

யேமன் அகதிகள் படகு விபத்து: ஐ.நா. புதிய புள்ளிவிவரம்

யேமன் அருகே அகதிகள் படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56 எனவும், 132 போ் மாயமாகியுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) தற்போது புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. ம... மேலும் பார்க்க

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்... மேலும் பார்க்க

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்ப... மேலும் பார்க்க