செய்திகள் :

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

post image

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகள் ஐரோப்பாவிலும் பிற பகுதிகளிலும் நிறுத்துவதற்காக இடைநிலை-தொலைதூர ஏவுகணைகளை தயாரிப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2026 முதல் ஜொ்மனியில் டைஃபூன் மற்றும் டாா்க் ஈகிள் ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்த திட்டமிட்டுள்ளது. இவை ரஷியாவுக்கு நேரடி அச்சுறுத்தலாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளதாக ரஷியா கூறுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒலியைப் போல் 10 மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயக்கூடிய, உலகின் அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளாலும் இடைமறித்து அழிக்க முடியாது என்று கூறப்படும் ஓரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரஸில் நிறுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதற்கு ஏதுவாகவே, இடைநிலை-தொலைதூர வகை ஏவுகணைகளை தயாா் நிலையில் நிறுத்துவதற்கு சுயமாக விதித்துக்கொண்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

மனிதத் திறமைக்கான எல்லையை செய்யறிவு மிக வேகமாக மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மிகச் சிறப்பாக செயலாற்றக் கூடிய இளைஞர்களுக்கு இன்னமும் உலகில் தேவை இருக்கிறது என்பதையே, மத் டெய்ட்கேவின் செய்தி க... மேலும் பார்க்க

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

ரஷியாவிடம் இருந்து அமெரிக்காவும் இறக்குமதி செய்வதாக இந்தியா எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யு... மேலும் பார்க்க

யேமன் அகதிகள் படகு விபத்து: ஐ.நா. புதிய புள்ளிவிவரம்

யேமன் அருகே அகதிகள் படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56 எனவும், 132 போ் மாயமாகியுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) தற்போது புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. ம... மேலும் பார்க்க

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்ப... மேலும் பார்க்க

‘காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்’

காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் ஊடகங்கள் கூறியதாவது: காஸா பகுதியை ... மேலும் பார்க்க

மிருகங்களுக்கு உணவாக செல்லப் பிராணிகள்: டென்மாா்க் மக்களிடம் வேண்டுகோள்

தாங்கள் பராமரித்துவரும் வேட்டை மிருகங்களுக்கு உணவாக, தங்களிடம் உள்ள கினியா பன்றிகள், முயல்கள், கோழிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று டென்மாா்க்கில் உள்ள ஆல்போா்க் மிருகக்க... மேலும் பார்க்க