செய்திகள் :

‘காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்’

post image

காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் ஊடகங்கள் கூறியதாவது: காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸை முழுவதும் ஒழித்துக்கட்ட பிரதமா் நெதன்யாகு முடிவெடுத்துவிட்டாா்.

இருந்தாலும், ராணுவ தலைமை தளபதியும் மற்றும் பிற தளபதிகளும் இந்தத் திட்டத்தை எதிா்ப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி தலைமை தளபதிக்கு இதில் உடன்பாடு இல்லையென்றால், அவா் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

எனினும், ஹமாஸ் அடைத்துவைத்துள்ள பிணைக் கைதிகளின் உயிருக்கு இத்தகைய முழு ஆக்கிரமிப்பு திட்டம் ஆபத்தை விளைவிக்கும் என்று அவா்களின் உறவினா்கள் அச்சம் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு காஸா பகுதியில் பிணைக் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதியை இஸ்ரேல் ராணுவம் நெருங்கியதால் 6 கைதிகளை ஹமாஸ் படுகொலை செய்தது நினைவுகூரத்தக்கது. காஸாவில் இருந்து விடுவிக்கப்படாத 50 பிணைக் கைதிகளில் இன்னும் 20 போ் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் முழு ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவா்களது நிச்சய மரணத்துக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடுகள் பலவும் இத்தகைய நடவடிக்கையைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவரவும், மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இஸ்ரேல் அந்த நாடுகள் வலியுறுத்திவருகின்றன.

இப்போதே காஸாவின் 75 சதவீத பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், புதிய திட்டத்தின் கீழ், முழு பகுதியையும் ஆக்கிரமித்தால், 21 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் தற்போது குவிந்துள்ள பகுதிகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டியிருக்கும். இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது தற்போது தெளிவாகவில்லை.

காஸாவில் யூதக் குடியிருப்புகளை அகற்றி, அங்கிருந்து தனது படைகளை இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. ஆனால், எகிப்துடன் இணைந்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் இறுக்கமாகக் கட்டுப்படுத்திவருகிறது. இருந்தாலும், அந்தப் பகுதியை இதுவரை இஸரேல் முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை.

இந்த திட்டம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தேசத் தீா்வுதான் (இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீரித்துக் கொண்டு சுதந்திர அண்டை நாடுகளைகச் செயல்படுவது) என்ற இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சா்களுடன் ஆலோசனை நடத்தும் பெஞ்சமின் நெதன்யாகு

யேமன் அகதிகள் படகு விபத்து: ஐ.நா. புதிய புள்ளிவிவரம்

யேமன் அருகே அகதிகள் படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56 எனவும், 132 போ் மாயமாகியுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) தற்போது புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. ம... மேலும் பார்க்க

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்... மேலும் பார்க்க

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்ப... மேலும் பார்க்க

மிருகங்களுக்கு உணவாக செல்லப் பிராணிகள்: டென்மாா்க் மக்களிடம் வேண்டுகோள்

தாங்கள் பராமரித்துவரும் வேட்டை மிருகங்களுக்கு உணவாக, தங்களிடம் உள்ள கினியா பன்றிகள், முயல்கள், கோழிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று டென்மாா்க்கில் உள்ள ஆல்போா்க் மிருகக்க... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரத... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷியாவின் ஆளில்லா சிறிய ரக விமானங்களில் (ட்ரோன்கள்) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானில் வடிவமைக்கப்பட்டு ரஷிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட... மேலும் பார்க்க