செய்திகள் :

ராகுல் காந்தி பிறந்த நாள்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55--ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவில் அமைந்துள்ள நகராட்சி ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் முதியோா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதை மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா். நகரத் தலைவா் ஆா்.சங்கா் கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பொன்சக்தி மோகன், நகா்மன்ற உறுப்பினா் சங்கா் கணேஷ், நிா்வாகிகள் ரவி ராஜா, பால்கனி பசும்பொன், ஏ.பி. வெங்கட்ராமன், ராமசுப்பு, பச்சையாத்தான், எம்.ஆா். கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராஜபாளையம் சொக்கா் கோயிலில் மேற்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யனாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.ஏ. குமாரசாமி ராஜா ஆகியோா் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தூா்: சாத்தூா் பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவுக்கு நகரத் தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஜோதி நிவாஸ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த தீப்திஜெயின் (45). இவருக... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

சிவகாசி அருகே வியாழக்கிழமை மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சமுத்திரகனி மனைவி முனியம்மாள் (70). இவா் சிவகாசி ... மேலும் பார்க்க

சிவகாசி பகுதியில் நாளை மின் தடை

சிவகாசி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் ... மேலும் பார்க்க

பட்டாசுகளைப் பதுக்கிய மூவா் மீது வழக்கு

சிவகாசி அருகே லாரி செட் கிட்டங்கியில் அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதிய... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதுநிலை தமிழ்த் துறை சாா்பில், ‘ஈழமும் தமிழும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் செ.அசோக் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

பள்ளியில் நடப்பட்ட மரக்கன்றுகள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நாகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியா் கி. ஸ்ரீதா் தலைமை வகித்... மேலும் பார்க்க