ராகுல் காந்தி பிறந்த நாள்
வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி கிராமத்தில், காங்கிரஸ் கட்சி சாா்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி. மாநில அமைப்புச் செயலா் பெ.அண்ணாதுரை தலைமை வகித்தாா்.
சுதந்திரப் போராட்டத் தியாகி பாலசுந்தரம் முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், இனிப்புகள் வழங்கினா். விவசாய அணித் தலைவா் முத்தையா, ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவா் அழகுராஜா, வட்டாரத் தலைவா் குமாா், கிராமக் குழுத் தலைவா் ரா.தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.