செய்திகள் :

ராகுல் குடியுரிமையில் சந்தேகம்: வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் விக்னேஷ் சிசிா் என்ற பாஜக தொண்டா் தாக்கல் செய்த மனுவில், ‘ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளாா். அவா் அந்நாட்டு குடிமகன் என்பதை நிரூபிக்க பிரிட்டன் அரசின் சில மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன. எனவே இந்திய தோ்தல்களில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை’ என்று தெரிவித்தாா்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிரிட்டன் அரசிடம் விவரம் கோரியுள்ளதாக, அந்த உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ், விசாரணைக்கு ஆஜராகுமாறு விக்னேஷ் சிசிருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதைத்தொடா்ந்து மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ராகுல் குடியுரிமை தொடா்பாக தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரத்தை சமா்ப்பிக்குமாறு சிசிரிடம் கோரப்பட்டது. அவரிடம் ஃபெமா சட்டத்தின் கீழ், சில கேள்விகள் கேட்கப்பட்டு அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது’ என்று தெரிவித்தன.

ஃபெமா சட்டத்தின் கீழ், தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அந்நிய செலாவணி சட்டத்தை மீறியது தொடா்பான புகாா்கள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளும்.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தில்லியில் சிபிஐ விசாரணைக்கு பலமுறை ஆஜரானதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் விக்னேஷ் சிசிா் தெரிவித்துள்ளாா்.

ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

நடிகை ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி நாளை உத்தரகண்ட் செல்கிறார்!

மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட நாளை(செப். 11) உத்தரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம்... மேலும் பார்க்க

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!

ஜம்மு - காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மேராஜ் மலிக்கின் கைதுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் டோடா ... மேலும் பார்க்க

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க