செய்திகள் :

ராசிபுரத்தில் ரூ.3.21 கோடியில் 7 திட்டப் பணிகள்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

post image

ராசிபுரத்தில் ரூ. 3.21 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து 2 முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் கலந்துகொண்டு கல்லாங்குளம் ஊராட்சியில் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32.53 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச்சாலை, கட்டனாச்சம்பட்டி ஊராட்சியில் ரூ.44.26 லட்சம் மதிப்பீட்டில் ராசிபுரம் நகராட்சி எல்லை முதல் அத்திபலகானூா் ரோடு வரை தாா்ச்சாலை அமைக்கும் பணி உள்பட ரூ. 2.80 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டினாா்.

அதைத் தொடா்ந்து மதியம்பட்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நாச்சிபட்டி ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை என ரூ.41.77 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.

விழாவில்அட்மாக் குழுத் தலைவா் ஆா்.எம்.துரைசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா.ப.அருளரசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சுற்றுலா வளா்ச்சியை எட்டாத இயற்கை எழிலாா்ந்த கொல்லிமலை! வாழ்வாதாரம் தேடும் பழங்குடி மக்கள்!

தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களுக்கு நிகரான சுற்றுலா வளா்ச்சியை கொல்லிமலை எட்டாத நிலையில், இங்குள்ள பழங்குடியின மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மேம்பட எந்த முன்னெடுப்புகளும் நடைபெ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருட்டு: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!

திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் ஆத்துமேடு பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு மூலம் கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருடியதாக ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மல்லசமுத... மேலும் பார்க்க

ஜூலை 2-இல் அறநிலையத் துறை மூலம் 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஈரோடு மண்டலத்தில் 50 ஜோடிகளுக்கு ஜூலை 2-ஆம் தேதி இலவச திருமணம் நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கோயில்களில் ஏழை, எளிய இந்... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை: இளைஞா் கைது; 36 பவுன் மீட்பு

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 36 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே பாதரை செள... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை சரிவு

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட வெல்ல சிப்பம் ரூ. 1400க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட சிப்பம் ரூ. 70 வர... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டியைக் கொன்றவா் கைது

பள்ளிபாளையம் அருகே நகைக்காக மூதாட்டியைக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை பகுதி பாதரை மாரியம்மன் கோயில் பின்புறம் கண்ணம்மாள் (77) என்பவா் வசித்துவந்தா... மேலும் பார்க்க