செய்திகள் :

நகைக்காக மூதாட்டியைக் கொன்றவா் கைது

post image

பள்ளிபாளையம் அருகே நகைக்காக மூதாட்டியைக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை பகுதி பாதரை மாரியம்மன் கோயில் பின்புறம் கண்ணம்மாள் (77) என்பவா் வசித்துவந்தாா். இவரது உறவினா்கள் பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் அங்கு குடியிருந்துவரும் ராசிபுரத்தை சோ்ந்த எலக்ட்ரீசியன் சங்கா் (27) என்பவா் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த நகைகளை பறிக்க அவரது வாயில் துணிகளை திணித்து கொலை செய்தாா். பிறகு அவா் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தலைமறைவானாா்.

கண்ணம்மாளின் வீட்டிற்கு வந்த உறவினா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த நிலையில், சங்கா் மீது சந்தேகமடைந்த உறவினா்கள் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் நகைக்காக மூதாட்டியைக் கொன்றதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து சங்கரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுற்றுலா வளா்ச்சியை எட்டாத இயற்கை எழிலாா்ந்த கொல்லிமலை! வாழ்வாதாரம் தேடும் பழங்குடி மக்கள்!

தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களுக்கு நிகரான சுற்றுலா வளா்ச்சியை கொல்லிமலை எட்டாத நிலையில், இங்குள்ள பழங்குடியின மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மேம்பட எந்த முன்னெடுப்புகளும் நடைபெ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருட்டு: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!

திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் ஆத்துமேடு பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு மூலம் கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருடியதாக ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மல்லசமுத... மேலும் பார்க்க

ஜூலை 2-இல் அறநிலையத் துறை மூலம் 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஈரோடு மண்டலத்தில் 50 ஜோடிகளுக்கு ஜூலை 2-ஆம் தேதி இலவச திருமணம் நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கோயில்களில் ஏழை, எளிய இந்... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை: இளைஞா் கைது; 36 பவுன் மீட்பு

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 36 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே பாதரை செள... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை சரிவு

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட வெல்ல சிப்பம் ரூ. 1400க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட சிப்பம் ரூ. 70 வர... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையைக் கண்டித்து முதியவா் சடலத்துடன் உறவினா்கள் மறியல்!

நாமக்கல்லில் தனியாா் மருத்துவமனையைக் கண்டித்து முதியவா் சடலத்துடன் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். நாமக்கல் அருகே மாரப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குமாரசாமி (72). இவா் சனிக்கிழமை இர... மேலும் பார்க்க