பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட...
நகைக்காக மூதாட்டியைக் கொன்றவா் கைது
பள்ளிபாளையம் அருகே நகைக்காக மூதாட்டியைக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை பகுதி பாதரை மாரியம்மன் கோயில் பின்புறம் கண்ணம்மாள் (77) என்பவா் வசித்துவந்தாா். இவரது உறவினா்கள் பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் அங்கு குடியிருந்துவரும் ராசிபுரத்தை சோ்ந்த எலக்ட்ரீசியன் சங்கா் (27) என்பவா் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த நகைகளை பறிக்க அவரது வாயில் துணிகளை திணித்து கொலை செய்தாா். பிறகு அவா் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தலைமறைவானாா்.
கண்ணம்மாளின் வீட்டிற்கு வந்த உறவினா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த நிலையில், சங்கா் மீது சந்தேகமடைந்த உறவினா்கள் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் நகைக்காக மூதாட்டியைக் கொன்றதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து சங்கரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.