செய்திகள் :

ராசிபுரம் வட்டாரங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

post image

நாமக்கல், வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

ராசிபுரம் வட்டாரத்தில் காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடம், வெண்ணந்தூா் வட்டாரத்தில் ஆனந்த கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், முதலமைச்சா் மருத்துவ காப்பீட்டு அட்டை, மின்வாரியத்தில் பெயா் மாற்றம், வீட்டு வரி, குடிநீா் வரி பெயா் மாற்றம், தொழிலாளா் நல வாரிய அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய அட்டைகள், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டா மாறுதலுக்கான ஆணை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, இம்முகாமில் உடனடி தீா்வாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வருவாய்த் துறை, மின் வாரியம், தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாா்பில் 74 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா். இந்த ஆய்வின்போது துறைசாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா். நாமக்கல், ஆ... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வா... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில்... மேலும் பார்க்க