Automobile Sales சரிவு ஏன் | EID Parry India q1 results-ல் கவனிக்க வேண்டியது | I...
மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு
பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், வடகரைஆத்தூா் ஊராட்சியில் ஸ்ரீ விநாயகா மகளிா் சுயஉதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினா் மூன்றுமுறை நேரடி கடன் பெற்று சரியாக திருப்பி செலுத்தி, தற்போது ரூ. 20 லட்சம் நேரடி கடன் பெற்று பட்டு நெசவுத்தொழில் செய்து வருகின்றனா்.
நாமக்கல் ஆட்சியா் இந்நிறுவனத்தில் ஆய்வுசெய்து, மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, ஜேடா்பாளையம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த ஜெயந்தி மற்றும் பூங்கொடி ஆகியோா் இணைந்து திருநீா், பஞ்சகவ்ய விளக்கு, சாம்பிராணி உள்ளிட்ட பூஜைப்பொருள்கள் உற்பத்தி செய்து வருவதை பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். இந்த ஆய்வின் போது, துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.