US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துற...
நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்கும் வகையில், சனிக்கிழமை காலை 10 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை இந்த குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெறும் இந்த முகாமை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.