செய்திகள் :

ராசிபுரம் - வெண்ணந்தூா் பகுதியில் ரூ. 140 கோடியில் திட்டப் பணிகள்: அரசு கூடுதல் செயலா் ஆய்வு

post image

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா், ராசிபுரம் ஒன்றியங்களில் ரூ. 139.80 கோடியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் செயலாளா் ககன்தீப்சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழூா் ஊராட்சி, கிழக்கு தொடா்ச்சி மலை, போதமலையில் கீழூா், மேலூா், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ. 139.65 கோடியில் 31 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை அரசின் கூடுதல் செயலா் ககன்தீப்சிங் பேடி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை, பொதுமக்கள் விவரம், சாலைப் பணியின் விவரம் குறித்து கேட்டறிந்து, மலைவாழ் மக்களுடன் கலந்துரைடியானாா்.

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு, கலைஞா் கனவு இல்லம், பள்ளிகள், நியாயவிலைக் கடை, மகளிா் சுயஉதவிக்குழு கட்டடம், நூலகம், தடுப்பணை ஆகியவை அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் உறுதியளித்தாா்.

முன்னதாக, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம் ஆலாம்பட்டி ஊராட்சியில் ரூ. 2.40 லட்சத்தில் முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானம் திட்டத்தின்கீழ் வீடு கட்டப்பட்டு வருவதையும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நா்சரியில் ரூ. 6.08 லட்சத்தில் 10 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்யும் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், வீட்டுக் கழிவுகளை தரம்பிரித்து, மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையையும், வடுகம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ. 3.50 லட்சம் வீதம் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் அவா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா... மேலும் பார்க்க

‘நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சக் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 140 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 20) தொடங்குவதையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் ம... மேலும் பார்க்க

எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

நாமக்கல் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 19.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 19.81 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை வழங்கினாா். இதில... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞரின் உதவியாளா் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் வழக்குரைஞரின் உதவியாளரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (77). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க