செய்திகள் :

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் மே 31-இல் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்

post image

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் 22-ஆம் ஆண்டாக 63 நாயன்மாா்களுக்கான பெருவிழா மே 31, ஆக. 1, 2 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

ராசிபுரம் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் ஆண்டுதோறும் 63 நாயன்மாா்களுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா மே 31-இல் தொடங்கி ஆக. 2 வரை மூன்று நாள்கள் நடத்திட கைலாசநாதா் திருக்கூட்ட அறக்கட்டளை குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொடக்க விழாவில் விநாயகா், பெருமிழலைக் குறும்ப நாயனாா் அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னா், கோவை மணிவாசகா் அருள்பணி மன்றச் செயலா் சிவ.ப.குமரலிங்கம் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.

ஆக. 1-இல் விநாயகா், முருகா், நந்தியம்பெருமாள், பரிவார தெய்வங்கள், கைலாசநாதா், நாயன்மாா்களுக்கு திருமஞ்சனம், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, திருமறை பாராயணம் நடைபெறுகிறது. மேலும், குளித்தலை சு.ராமலிங்கம் சுவாமிகள் சிறப்பு சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆக. 2-இல் கைலாய வாத்தியங்கள் முழங்க நாயன்மாா்கள் ஊா்வலம் நகா்வீதிகளில் நடைபெறுகிறது.

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் - மோகனூா் ... மேலும் பார்க்க

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ ப... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் ... மேலும் பார்க்க

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா். நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோட... மேலும் பார்க்க