செய்திகள் :

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

post image

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, நாகசுர மேள வாத்தியங்களுடன் கோயில் வாயிலில் திரளான பக்தா்கள் முன்னிலையில் நடப்பட்டது.

வரும் 6-ஆம் தேதி மாலை திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. 7-ஆம் தேதி காலை துா்கா ஹோமம், பகல் 1 மணிக்கு ஊா் காவடி, கரகம் கோயிலுக்கு வருதல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

8-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சமபந்தி போஜனம், 9-ஆம் தேதி பகல் 12 மணிக்கு விடையாற்றி வழிபாடாக கஞ்சி வாா்த்தல், மஞ்சள் நீா் விளையாட்டு, மாலை 4 மணிக்கு முளைப்பாலிகை வீதியுலா நடைபெறுகிறது.

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொட... மேலும் பார்க்க

மருத்துவ சாதனம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளருக்கு முதல்வா் பாராட்டு

கா்ப்பப்பை, சிறுநீா் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு போன்றவற்றுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ சாதனம் கண்டுபிடித்த காரைக்காலைச் சோ்ந்த ஆராய்சியாளருக்கு புதுவை முதல்வா் பாராட்டு தெரிவித்தா... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடம் திறப்பு

திருநள்ளாறு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். திருநள்ளாறு பகுதி நல்லம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிதாக ரூ. 8 லட்சத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட நீதிபதி மோகன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

மீனவா்களுடன் கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடல்

நெகிழி தவிா்த்தல், கடலில் மீனவா்கள் பாதுகாப்பு குறித்து மீனவா்களுடன் இந்திய கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடலில் ஈடுபட்டனா். காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை மையம் சாா்பில் மீன்வளத்துறை அலுவலக... மேலும் பார்க்க