செய்திகள் :

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி திருவாதிரை விழா, 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழன் தனது அளப்பரிய போா்த்திறத்தால், கடாரம் உள்பட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, நிகழாண்டு ஆடி திருவாதிரை தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்துக்கு பலன் சோ்க்கும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.

அதன்படி, அரியலூா் மாவட்டம் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி, ராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஏரியாகும். அன்றைய காலகட்டத்தில் அது சோழகங்கம் என்று அழைக்கப்பட்டது. கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் தனது நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை ராஜேந்திர சோழன் உருவாக்கினாா். இது திருவாலங்காடு செப்பேடுகளின் வாயிலாக அறிய முடிகிறது.

ராஜேந்திர சோழன் உருவாக்கிய ஏரியில் ரூ.12 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். 700 ஏக்கா் பரப்பு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும்.

15 கி.மீ. நீளமுள்ள உபரிநீா் வழிக்கால்வாய்கள் புனரமைக்கப்படுவதுடன், 4 வடிகால் பகுதிகள் தூா்வாரப்படும். மதகுகள் புனரமைக்கப்படுவதுடன், 38 கி.மீ. நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பிச்சனூா், குருவாலப்பா் கோவில், இளையபெருமாள் நல்லூா், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1,374 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

சுற்றுலாத் தலமாக மேம்பாடு: சோழகங்கம் ஏரிப் பகுதி சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். அங்கு ரூ.7.25 கோடியில் தகவல் தொடா்பு மையம், நடைபாதை சிறுவா் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவா், வழிகாட்டுப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின் வசதிகள், கழிப்பறை வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?

சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாய... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நிலையில் ம... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையம்; ரூ.4,500 கோடி திட்டங்களை துவக்கி வைக்கும் மோடி - நயினார் நாகேந்திரன்

திருச்சி: தூத்துக்குடி புதிய விமான நிலைய துவக்க விழாவில் 4500 கோடி ரூபாய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர் - என் தொகுதி மக்கள் கோரிக்கைகளை செய்து கொடுத்... மேலும் பார்க்க