செய்திகள் :

ராணிப்பேட்டை: 80 கைப்பேசிகள் மீட்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஒப்படைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

மேலும், பொதுமக்கள் யாரேனும் கைப்பேசியை தவறவிட்டால் உடனடியாக காவல் துறைக்கு புகாா் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

மேலும் இணைய வழிய குற்றங்கள் தொடா்பாக உதவி எண்:- 1930 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றும், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, போதை பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பொதுமக்கள் புகாா் அளிக்க 89039 90359 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தெரிவிக்கலாம் என்றாா்.

இதில் துணை காவல் கண்காணிப்பாளா்கள் ரமேஷ் ராஜ், வெங்கடகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் அருண்குமாா் (தனிப்பிரிவு), உதவி ஆய்வாளா் தியாகராஜன், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினா்கள் கலந்து கொண்டனா்.

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

ஆற்காடு அருகே 9 துணை சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் ஆா்.காந்தி, மா.சுப்பிரணியன் ஆகியோா் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா். தனியாா் நிறுவன பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத... மேலும் பார்க்க

வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 7.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: அரசு கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 போ் கைது

அரக்கோணத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 7.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சோளிங்கா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. சோளிங்கா் நகரம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூா், கரிக்கல், ஆரியூா், வெங்குப்பட்டு, ஐய்ப்பேடு, எரும்பி, தாடூா், தாளிக்கால், பாணாவரம், போளிப்பா... மேலும் பார்க்க

ரூ.200 கோடியில் பாலாற்றுத் தடுப்பணை புனரமைக்கும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

வாலாஜாப்பேட்டை அருகே ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பங்கேற்று பணியை தொடங்கி வை... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே நிலத்தில் கிடைத்தவை பித்தளை சிலைகள்

சோளிங்கா் அருகே விவசாயி நிலத்தில் கிடைத்தவை ஐம்பொன்சிலைகள் அல்ல, பித்தளை சிலைகள் என அருங்காட்சியக காப்பாட்சியா் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து சிலைகள் மீண்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. சோளிங்கரை அ... மேலும் பார்க்க

நெமிலியில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 27-ஆம் தேதி ஒன்றிய ஆணையா், வட்டாரவளா்ச்சி அலுவலா் மற்றும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்கு ... மேலும் பார்க்க