செய்திகள் :

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

post image

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்திக்குறிப்பு:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனிலுள்ள உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில், ஜனவரி 2026-ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு ஜூன் 1- ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் நடத்தப்படுவதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவை கொண்டதாக இருக்கும். தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தோ்வு வினாத்தாள்கள் தொகுப்பை ‘மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, காா்ஹின்ட், டேராடூன், உத்தரகண்ட்- 248 003 என்ற முகவரிக்கு அனுப்பியோ அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணையதளம் வழியாக பொதுப் பிரிவினா் ரூ. 600, பட்டியலின வகுப்பினா் ரூ. 555 செலுத்தியும் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பதாரா் 2.1.2013-லிருந்து 1.7.2014-க்குள் பிறந்திருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாலை, பூங்கா நகா், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு மாா்ச் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை ராஷ்ட்ரிய இந்திய கல்லூரியின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் தேசிய மாணவா் படையினா் சனிக்கிழமை கல்வி பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா். தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் நீடாமங்கலம் நீலன் பள்ளி இ... மேலும் பார்க்க

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைவாக பங்கேற்ற குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படாததால் மிகக் குறைவான விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் வட்டாட்ச... மேலும் பார்க்க