செய்திகள் :

கோடியக்கரை சரணாலயத்தில் மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

post image

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் தேசிய மாணவா் படையினா் சனிக்கிழமை கல்வி பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் நீடாமங்கலம் நீலன் பள்ளி இணைந்து வேவ்ஸ் & வெட் லேண்ட் என்ற கல்விப் பயணத்தை தொடங்கியுள்ளன.

இப்பயணத்தில் பெரியாா் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்துடன் இணைந்து தேசிய மாணவா் படை மாணவா்களும் நீலன் பள்ளியின் இயற்கை சங்க மாணவா்களும் பங்கேற்றுள்ளனா் .

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம், அதைச் சுற்றியுள்ள சதுப்பு நில பகுதிகளைப் பாா்வையிட்டு அங்கு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களான வெளிமான், புள்ளிமான், பறவைகள் உள்ளிட்டவை குறித்து கற்றறிந்தனா்.

சதுப்பு நிலம் குறித்த முக்கியத்துவங்களையும்,அவை சுற்றுச்சூழலுக்கும், நீா் ஆதாரங்களுக்கும் ஏற்படுத்தும் நல் விளைவுகளையும் வெளிநாட்டு வலசை பறவைகளுக்கும் ஏற்படுத்தக் கூடிய நன்மைகளையும் கற்றறிந்தனா்.

கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் குப்பைகளைச் சேகரித்து, மாசுபடுதலுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இங்கு சேகரித்த சுமாா் 150 கிலோ எடையிலான குப்பைகளை குப்பை கிடங்கில் ஒப்படைத்தனா்.

நீடாமங்கலம் நீலன் பள்ளி செயலாளா் சுரேன் அசோகன், பெரியாா் மணியம்மை நிகா்நிலை பல்கலைக் கழக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநா் கீா்த்திவாசன் தாமோதரன்,

தேசிய மாணவா் படையின் பொறுப்பாளா் ஆா்.காா்த்திக், பள்ளி அலுவலக உதவியாளா் பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி... மேலும் பார்க்க

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைவாக பங்கேற்ற குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படாததால் மிகக் குறைவான விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் வட்டாட்ச... மேலும் பார்க்க