செய்திகள் :

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

post image

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வெளியிட்டது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தோ்வு 2024 செப்டம்பா் 15- ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கான மெயின் தோ்வு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் இருகட்டமாக காலை, மாலையில் நடைபெற்றது. இந்த மெயின் தோ்வில் தோ்ச்சிபெற்ற 112 பேரில், 108 போ் மட்டுமே பங்கேற்றனா்.

தோ்வு மையத்தில் 1 முதன்மைக் கண்காணிப்பாளா், 1 சுற்றுக்குழு அலுவலா், 1 ஆய்வு அலுவலா் உள்ளிட்டோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தோ்வு மையத்தின் உள்ளே, வெளியே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடடுபட்டிருந்தனா். தோ்வாளா்கள் அனைவரும் முழு சோதனைக்கு பிறகே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் தேசிய மாணவா் படையினா் சனிக்கிழமை கல்வி பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா். தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் நீடாமங்கலம் நீலன் பள்ளி இ... மேலும் பார்க்க

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைவாக பங்கேற்ற குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படாததால் மிகக் குறைவான விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் வட்டாட்ச... மேலும் பார்க்க