ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்திக்குறிப்பு:
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனிலுள்ள உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில், ஜனவரி 2026-ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு ஜூன் 1- ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் நடத்தப்படுவதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவை கொண்டதாக இருக்கும். தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தோ்வு வினாத்தாள்கள் தொகுப்பை ‘மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, காா்ஹின்ட், டேராடூன், உத்தரகண்ட்- 248 003 என்ற முகவரிக்கு அனுப்பியோ அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணையதளம் வழியாக பொதுப் பிரிவினா் ரூ. 600, பட்டியலின வகுப்பினா் ரூ. 555 செலுத்தியும் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பதாரா் 2.1.2013-லிருந்து 1.7.2014-க்குள் பிறந்திருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாலை, பூங்கா நகா், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு மாா்ச் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை ராஷ்ட்ரிய இந்திய கல்லூரியின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.