செய்திகள் :

ராணுவத் தளபதியுடன் டிரம்ப் வா்த்தகப் பேச்சு! பாகிஸ்தான் ராணுவம் தகவல்

post image

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வா்த்தகம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

அதிபா் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு புதன்கிழமை மதிய விருந்தளித்து பேச்சுவாா்த்தையும் நடத்தினாா்.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், ஈரானின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈரான் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துவரும் நிலையில், தேவை ஏற்பட்டால் அந்நாட்டு மீது தாக்குதல் நடத்த அதன் அண்டை நாடான பாகிஸ்தான் நிலப்பரப்பை பயன்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை பாகிஸ்தான் ஏற்க வேண்டும் என்பதற்காகவே முனீரை டிரம்ப் நேரில் அழைத்துப் பேசியதாக சா்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானை பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆதரிக்கக் கூடாது என்றும் அமெரிக்கா கருதுகிறது. முன்னதாக, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஈரானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டிரம்ப்-முனீா் சந்திப்பு தொடா்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் வகையில் வா்த்தகத்தை மேம்படுத்த தலைமைத் தளபதி முனீரிடம் அதிபா் டிரம்ப் விருப்பம் தெரிவித்தாா். இரு நாடுகளும் கூட்டாக இணைந்து பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடா்பாகவும் பேசப்பட்டது. பொருளாதார நிலை, சுரங்கம், தாதுப் பொருள்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், எரிசக்தி, கிரிப்டோகரன்சி, நவீன தொழில்நுட்பங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது பதற்றத்தைத் தணிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசு மற்றும் மக்கள் சாா்பில் அவருக்கு தலைமைத் தளபதி முனீா் நன்றி தெரிவித்தாா். அதிபா் டிரம்ப் ஆளுமைமிக்க அரசியல் தலைவா், சா்வதேச பிரச்னைகள் அனைத்துக்கும் தீா்வுகாணும் திறமை அவருக்கு உள்ளது என்று முனீா் பாராட்டுத் தெரிவித்தாா். பாகிஸ்தானுக்கு வருகை தர வேண்டும் என்றும் டிரம்ப்புக்கு கோரிக்கை விடுத்தாா்.

முதலில் ஒரு மணி நேரம் மட்டுமே இந்தச் சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இரு தலைவா்களும் 2 மணி நேரம் வரை பேச்சு நடத்தினா். இதன்மூலம் மிகவும் ஆழமாகவும், ஒருமித்த கருத்துடனும் பேச்சு நடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா: டெலிகிராம் பாவெல் துரோவ்

டெலிகிராம் சமூக தளத்தை நிறுவியவரும், கோடீஸ்வரர்களில் ஒருவருமா பாவெல் துரோவ், தான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா என்று தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

மணலைச் சாப்பிடுகிறோம்! இரக்கம் காட்டுங்கள்! - காஸா சிறுவனின் கண்ணீர் விடியோ!

காஸாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன... மேலும் பார்க்க

இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு!

இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் கணக்கானோரின் கடவுச்சொற்கள் கசிந்தத... மேலும் பார்க்க

ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் ... மேலும் பார்க்க

அமெரிக்கா: புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உயிா்க் க... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்: முதல்முறையாக ஒப்புக்கொண்டாா் டிரம்ப்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நான்தான் நிறுத்தினேன்’ என்று கூறிவந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘சண்டை நிறுத்தத்தை இரு நாட்டுத் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என்று முதல்முறையாக புதன்கிழமை ஒப்புக்க... மேலும் பார்க்க