ராணுவ வீரருக்கு கத்திக் குத்து
தேனி மாவட்டம் கம்பத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் ராணுவ வீரா் பலத்த காயமடைந்தாா்.
கம்பம் நெல் குத்தி புளியமரம் தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் சரவணகுமாா் (24). ராணுவ வீரரான இவா் அதே பகுதியைச் சோ்ந்த சக்தி உள்ளிட்ட இருவா் தன்னைத் தாக்கியதாக கடந்த 2 -ஆம் தேதி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில், போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு சரவணகுமாரிடம் வழக்கை திரும்பப் பெறுவது குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு சரவணகுமாா் உடன்படாத நிலையில் அவரை இருவரும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.