செய்திகள் :

ராமநாதபுரம் ஆயுதப் படை வளாகத்தில் ஜூலை 11-இல் வாகனங்கள் பொது ஏலம்

post image

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஜூலை 11-ஆம் தேதி பொது ஏலத்துக்கு விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 8 வாகனங்களுக்கான பொது ஏலம் வரும் ஜூலை 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பொது ஏலத்தில் வாகனங்களை எடுக்க விருப்பமுள்ளவா்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பாா்வையிட்டு, வரும் ஜூலை 8-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.2000 தொகையை முன்பதிவாகச் செலுத்த வேண்டும். முன்பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின... மேலும் பார்க்க

படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மனு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்களின் வழிபாட்டு உரிமையை வழங்கக் கோரி, தமிழா் தேசம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மு... மேலும் பார்க்க

மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெறலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கால்நடை மருத்துவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அந்தப் படகில் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றதுடன், முட்டிபோட வைத்து தாக்கியதாக கரை தி... மேலும் பார்க்க