செய்திகள் :

ராமநாதபுரம்: தொழிலாளி படுகொலை; புரோட்டாவிற்கு சால்ணா கேட்டதால் தகராறா? -போலீஸ் தீவிர விசாரணை!

post image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம் (49). மீனவரான இவர் அவ்வப்போது பல்வேறு கூலி வேலைகளும் செய்து வருபவர்.

கடந்த சில நாள்களுக்கு முன் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். களஞ்சியம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி போனதால் இவரது மனைவி மற்றும் மகன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

மண்டபம்

இந்நிலையில் களஞ்சியம் நேற்று இரவு மண்டபம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றின் வாசலில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், தூங்கி கொண்டிருந்த களஞ்சியத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த மண்டபம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று களஞ்சியத்தின் உடலை கைபற்றினர். அதனை தொடர்ந்து களஞ்சியத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்த பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்ற நிலையில் அப்படியே நின்று விட்டது. இந்நிலையில் களஞ்சியம் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த வாரம் அங்கு புரோட்டா வாங்க வந்த நபர் ஒருவர் புரோட்டாவிற்கு கூடுதலாக சால்ணா கேட்ட போது களஞ்சியம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக மண்டபம் டி.நகரை சேர்ந்த சக்திவேல், கார்த்திக் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலம்

இதனிடையே மண்டபம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரைஸ் மில் தொழிலாளி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், போதைக்கு அடிமையானவர். இவர் நேற்று இரவு மண்டபம் டாஸ்மாக் கடை அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காளிதாஸின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினர்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் காளிதாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் ராமேஸ்வரம் சரகத்தில் மட்டும் 7 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மண்டபத்தில் இருவர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்கள்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க