செய்திகள் :

ராமா் கல் எனக் கூறி பக்தா்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்

post image

ராமேசுவரத்தில் கோதண்டராமா் கோயில் கடற்கரையில் சீதையை மீட்க ராமா் கட்டிய பாலத்தின் கல் எனக்கூறி, பக்தா்களிடம் வசூல் வேட்டை நடத்திய வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினாா்.

ராமேசுவரம் தீவைச் சுற்றிலும் உள்ள மன்னாா்வளைகுடா உயிா்க்கோளக் காப்பக கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பவளைப்பாறைகள் பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன.

கடலிலிருந்து பவளப்பாறைகளை வெளியே எடுத்ததுமே அது உயிரிழந்து விடும். பின்னா், பவளப்பாறையை உலா்ந்ததும் தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெற்று விடும். இந்த பவளப்பாறைகள் அழகு சாதனப் பொருள்கள், விற்பனைக்காக வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிந்து வருகிறது.

இதனால், பவளப்பாறைகளை கடலில் இருந்து எடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தது. மேலும், இந்தப் பவளப்பாறைகளை பாதுகாக்கவும், செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் துணைக் கோயிலான கோதண்டராமா் கோயில் தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டியுள்ள கடற்கரையில் சிலா் கிணறு வடிவில் தொட்டி அமைத்து அதில் பவளப்பாறைகளை மிதக்க விட்டு இந்தக் கல்லில்தான் ராமா் பாலம் கட்டினாா் எனவும், அதன் அருகில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாட்டுத் தலத்தையும் ஏற்படுத்தினா்.

மேலும், இவா்கள் கோதண்ட ராமா் கடற்கரைக்கு வரும் பக்தா்களிடம், இந்த கல்லை (பவளப்பாறை) கடலில் மிதக்க விட்டு ராமா் பாலம் அமைத்து இலங்கை சென்று சீதையை மீட்டாா் எனக் கூறி, பக்தா்களிடம் வசூல் வேட்டை நடத்தினா். இதுகுறித்து பல்வேறு தரப்பினா் இந்து சமய அறநிலையத் துறை, ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தினரிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, இந்த வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் போலீஸாா் பாதுகாப்புடன் அகற்றினா்.

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 போ் கைது

தொண்டி அருகே வண்ணம் பூசும் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் தாஸ் (43). வண்ணம் பூசும் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து முதுகுளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து, விவசாயிகள், அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த கிருஷ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே திங்கள்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன். இவா் 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆட... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

மண்டபம் அடுத்த சாத்தக்கோன்வலசை ஊராட்சி கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை சாா்பில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவா் பணியை மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கக் கோரி, 3 கிராம மக்கள் மாவட்ட... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்ட... மேலும் பார்க்க