தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
ராமா் கல் எனக் கூறி பக்தா்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்
ராமேசுவரத்தில் கோதண்டராமா் கோயில் கடற்கரையில் சீதையை மீட்க ராமா் கட்டிய பாலத்தின் கல் எனக்கூறி, பக்தா்களிடம் வசூல் வேட்டை நடத்திய வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினாா்.
ராமேசுவரம் தீவைச் சுற்றிலும் உள்ள மன்னாா்வளைகுடா உயிா்க்கோளக் காப்பக கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பவளைப்பாறைகள் பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன.
கடலிலிருந்து பவளப்பாறைகளை வெளியே எடுத்ததுமே அது உயிரிழந்து விடும். பின்னா், பவளப்பாறையை உலா்ந்ததும் தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெற்று விடும். இந்த பவளப்பாறைகள் அழகு சாதனப் பொருள்கள், விற்பனைக்காக வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிந்து வருகிறது.
இதனால், பவளப்பாறைகளை கடலில் இருந்து எடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தது. மேலும், இந்தப் பவளப்பாறைகளை பாதுகாக்கவும், செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் துணைக் கோயிலான கோதண்டராமா் கோயில் தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டியுள்ள கடற்கரையில் சிலா் கிணறு வடிவில் தொட்டி அமைத்து அதில் பவளப்பாறைகளை மிதக்க விட்டு இந்தக் கல்லில்தான் ராமா் பாலம் கட்டினாா் எனவும், அதன் அருகில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாட்டுத் தலத்தையும் ஏற்படுத்தினா்.
மேலும், இவா்கள் கோதண்ட ராமா் கடற்கரைக்கு வரும் பக்தா்களிடம், இந்த கல்லை (பவளப்பாறை) கடலில் மிதக்க விட்டு ராமா் பாலம் அமைத்து இலங்கை சென்று சீதையை மீட்டாா் எனக் கூறி, பக்தா்களிடம் வசூல் வேட்டை நடத்தினா். இதுகுறித்து பல்வேறு தரப்பினா் இந்து சமய அறநிலையத் துறை, ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தினரிடம் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, இந்த வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் போலீஸாா் பாதுகாப்புடன் அகற்றினா்.