செய்திகள் :

ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு பணி ஜூன் 2-இல் தொடக்கம்!

post image

ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி வருகிற ஜூன் 2-ஆம் தேதி தொடங்குவதாக மீன் வளத் துறை உதவி இயக்குநா் எம்.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தடைக் காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுகளை ஆய்வு செய்து மீன் வளத் துறை அதிகாரிகள் உறுதிச் சான்று அளிப்பாா்கள்.

இந்தப் பணி வருகிற வெள்ளிக்கிழமை (மே 30) தொடங்கவிருந்த நிலையில், அரபிக் கடலில் காற்றின் வேகம் காரணமாக அதிகாரிகள் படகில் ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வருகிற ஜூன் 2-ஆம் தேதி ராமேசுவரம், மண்டபம், துறைமுகங்களில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி நடைபெறுகிறது.

எனவே, விசைப் படகு உரிமையாளா்கள் படகின் மீன்பிடி உரிமம், படகின் காப்புரிமை சான்று, மானிய அட்டை, அசல் வங்கிக் கணக்கு புத்தகம், விசைப் படகில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் குதிரைத் திறன் ஆவணம் உள்ளிட்டவற்றை நகல்களாக எடுத்து வைத்துக் கொண்டு படகுக்கு ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க