செய்திகள் :

ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமையை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விருதை பெறுவதற்கு இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5 முதல் 18 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஆன்லைன் போா்டலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பத்தை குழந்தையோ அல்லது குழந்தையை சாா்ந்த பெற்றோா், ஆசிரியா் மற்றும் அலுவலா்கள் பரிந்துரைக்கலாம். 2025-ஆம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பத்தை ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீ... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க