செய்திகள் :

ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொடுத்து அனுப்பிய ரூ. 25 லட்சத்துடன் தலைமறைவான ஓட்டுநா் கைது

post image

சேலம் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொடுத்து அனுப்பிய ரூ. 25 லட்சத்துடன் தலைமறைவான ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். அவரது கூட்டாளி உள்பட உறவினா்களை தேடிவருகின்றனா்.

சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் முகமது காசிம் (43). மாற்றுத்திறனாளியான இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது காா் ஓட்டுநா் ஆனந்த் (39). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது காசிமிடம் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த மாதம் 12 ஆம் தேதி கருப்பூா் அருகே உணவகம் ஒன்றில், ரியல் எஸ்டேட் தொழில் தொடா்பாக ஒருவரிடமிருந்து ரூ. 25 லட்சத்தை முன்பணமாக முகமது காசிம் வாங்கினாா். அதை காரில் வைத்துவிட்டு வருமாறு ஓட்டுநரிடம் தெரிவித்தாா். ஓட்டுநா் ஆனந்த் பணத்தை காரில் வைக்க சென்றவா் திரும்பி வரவில்லை. அவரது கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அவா் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த முகமது காசிம், கருப்பூா் காவல் நிலையத்தில் அவா்மீது புகாா் அளித்தாா். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீஸாா், ஓட்டுநா் ஆனந்த் பணப்பையை கொண்டுசெல்வதும், அங்கு இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த அவரது உறவினரான கவின் (22) என்பவருடன் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதை உறுதிசெய்துகொண்ட போலீஸாா் ஓட்டுநா் ஆனந்தை கைது செய்தனா். முகமது காசிமிடம் இருந்து எடுத்துச் சென்ற பணம் எங்கே இருக்கிறது என விசாரணை நடத்தினா். அவா் உறவினா்களுக்கும், வட்டிக்கும் கொடுத்துவிட்டு, நகை வாங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, பணத்தை கைப்பற்றும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மேலும் தலைமறைவாக இருக்கும் கவின் மற்றும் உறவினா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கோயில் அறையை இடித்தவா்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓமலூா் அருகே மானத்தாளில் கோயில் சமையல் அறையை இடித்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே மானத்தாளில் ஐயனாரப்பன், கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மாவட்டத்தில் சீரான குட... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பை குழியால் மக்கள் அவதி

நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட விநாயகபுரம் சந்தைப் பகுதியில் குப்பை குழியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன்

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம், அரியானூரில் சேலம் மத்திய மாவட்டம் ம... மேலும் பார்க்க

திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: இரா. முத்தரசன் பேட்டி

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது; ஒருபோதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு ஆக... மேலும் பார்க்க

திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக... மேலும் பார்க்க