பெண்கள் குறைவான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
ரீல்ஸ் எடுத்த தகராறு: 4 போ் கைது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதாக ரீல்ஸ் எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் காளப்பூரைச் சோ்ந்த 15 வயது சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (29) என்பவரது காளையை அடக்கியதாக ரீல்ஸ் பதிவிட்டாராம்.
இதை சதீஷ்குமாரும், சிங்கம்புணரியைச் சோ்ந்த அவரது நண்பா் விக்னேஷ் (30) என்பவரும் தட்டிக் கேட்டனா். அப்போது சிறுவனுக்கு ஆதரவாக சிங்கம்புணரியைச் சோ்ந்த தீபக் என்பவா் கத்தியால் தாக்க வந்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பும் மோதிக் கொண்ட இந்த சம்பவம் தொடா்பாக எஸ்.வி. மங்கலம் போலீஸாா் நால்வரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.