செய்திகள் :

ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீடு முறைகேடு: ‘மிந்த்ரா’ மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

post image

பிரபல இணையவழி ஆடை வா்த்தக நிறுவனமான ‘மிந்த்ரா’அந்நிய நேரடி முதலீடு விதிகளை மீறி ரூ.1,654 கோடியை முறைகேடாகப் பெற்ாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்நியச் செலாவணி நிா்வாகச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிந்த்ரா, பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட் நிறுவனத்தின் அங்கமாகும்.

இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘மிந்த்ரா மற்றும் அதனுடன் தொடா்புடைய நிறுவனங்கள் மொத்தமாக பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் முறையில் வணிகம் செய்வதாகக் கூறி, ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால், தனது பெரும்பாலான பொருள்களை தனது ஒரே துணை நிறுவனமான வெக்டாா் இ-காமா்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை அந்த நிறுவனம் மீறியுள்ளது’ என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. இது தொடா்பாக மிந்த்ரா நிறுவனம், அதன் பெங்களூரு அலுவலக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள மிந்த்ரா நிறுவன செய்தித் தொடா்பாளா், ‘விதிகளின்படி நடப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டு தொடா்பான முழுவிவரம் இதுவரை எங்களுக்கு முறைப்படி கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் அதை ஆய்வு செய்து விசாரணை அமைப்புக்கு ஒத்துழைப்பும் அளிப்போம்’ என்று கூறியுள்ளாா்.

இந்தியாவில் உற்பத்தியாளரையும், வாடிக்கையாளரையும் இணைக்கும் வகையில் செயல்படும் இணையவழி வா்த்தக நிறுவனங்களில் மட்டுமே அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க