செய்திகள் :

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா், உதவியாளா் கைது

post image

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த துலுக்கனூரில் நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையா் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

துலுக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் குமரேசன். இவா் தனது 4 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்துதரக் கோரி ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள நில அளவையா் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளாா். இதற்கு நில அளவையா் ஜீவிதா (31) ரூ. 10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அவா்கள் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நில அளவையா் ஜீவிதாவிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் நரேந்திரன் தலைமையிலான போலீஸாா் அவரையும், உதவியாளா் கண்ணதாசனையும் (41) கைது செய்தனா். இதுகுறித்து மேலும் அவா்கள் விசாரித்து வருகின்றனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க