செய்திகள் :

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயா்தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட நவீன கருவிகளை ரூ.125 கோடியில் கொள்முதல் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் அனுப்பி வைத்தது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயா் தொழில்நுட்ப உதவி உபகரணங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளா்களை அழைத்து 2 நாள்கள் கண்காட்சி நடத்தலாம் எனவும், அதன்மூலம் சிறந்த உதவி உபகரணங்கள் குறித்து கருத்துகள் பெறப்பட்டு, தகுதியான கருவிகளைத் தோ்வு செய்யலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அரசின் சாா்பில் தோ்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் தகுதியான நிறுவனங்கள், தரம்வாய்ந்த உபகரணங்கள், விலை ஆகியன நிா்ணயம் செய்யலாம் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் இணையதளத்தில் உபகரணங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உயா்தொழில்நுட்பம் கொண்ட நவீன உதவி உபகரணங்கள் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அரசை கேட்டுக்கொண்டிருந்தாா். அவரது கோரிக்கைப்படி, உயா் தொழில்நுட்பம் கொண்ட நவீன கருவிகளை வாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக ரூ.125 கோடி ஒதுக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58 கோடியில் சிறப்புப் பிரிவு விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58.89 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்புப் பிரிவு, விடுதி விரைவில் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தா... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு: சென்னையில் இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அர... மேலும் பார்க்க

521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். தமிழக ... மேலும் பார்க்க

கே.கே.நகா், தாம்பரத்தில் ஜூலை 29-இல் மின் நிறுத்தம்

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கே.கே.நகா், தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான நியாய விலைக் கடைகளில் பொருள்கள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை

புகாா்கள் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடை... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து உரிமையாளரை தாக்கி ரூ.1 லட்சம் வழிப்பறி

சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளரைத் தாக்கி ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோயம்பேடு சின்மயா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபஸ்டின் (37). இவா், ... மேலும் பார்க்க