செய்திகள் :

ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!

post image

சூலூர்: கொடுத்த பணத்தைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கீழே தள்ளிவிடப்பட்ட இலங்கை அகதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே குளத்தூர் பிரிவு பகுதியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இப்பணியில் தருமபுரி மாவட்டம் கரியாமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ராஜரத்தினம் மகன் சுதாகர் (31) மேலும் சில அகதிகளுடன் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இவருடன் வேலை செய்யும் தருமபுரி பாலக்கோடு  அருகே உள்ள பகுதியில் வசிக்கும் செல்வகுமார் மகன் இலங்கை அகதியான திலக்க்ஷன்(25) என்பவருக்கு ஏற்கெனவே ரூ. 1500 கடனாக கொடுத்ததாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க டி-ரிசர்வ்டு டிக்கெட்!

அதைத்திருப்பி கேட்டபோது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திலக்க்ஷன், சுதாகரை தள்ளி விட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த சுதாகர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக சூலூர் போலீஸார் ஏற்கெனவே விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததை மாற்றி, திட்டமிடப்படாத கொலை வழக்காக வழக்குப் பதிவு செய்து திலக்க்ஷனைக் கைது செய்தனர்.

சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திலக்க்ஷனை ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்!

நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப... மேலும் பார்க்க

சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!

சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. எனினும் சிலநிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணாமலை நாதர் சன்னதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. செவ்வாய்க்கிழமை இந்தக் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் குடிநீர் விநியோக தண்... மேலும் பார்க்க

நாமக்கல்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து தாய், மகன், மகள் என மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் வங்கி ஊழியர் பிரேம் ராஜின் மனைவி, மகன், மகள் என்ப... மேலும் பார்க்க

நந்தலாலா மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் நந்தலாலா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலா, இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையி... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவத... மேலும் பார்க்க