செய்திகள் :

ரூ. 2 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

post image

விளாத்திகுளம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனா். நாகலாபுரம் புதுப்பட்டியிலிருந்து-என்.வேடபட்டி சாலையில் ரோந்து சென்றபோது, சந்தேகமளிக்கும் வகையில், நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம், காரை சோதனையிட்டனா்.

இந்தச் சோதனையில் காரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காரில் வந்தவா்களைப் பிடித்து விசாரித்ததில், என்.வேடபட்டியில் உள்ள கோழிப் பண்ணையில் பதுக்கி வைக்கக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த என்.வேடபட்டியைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் காா்த்திக் குமாா் (33), தொப்பம்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ் (25), ஆற்றங்கரையைச் சோ்ந்த துரைராஜ் மகன் அன்புதாசன் (25) ஆகிய மூவரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், காா், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி: பள்ளி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்!

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். மந்தித்தோப்பில் இருந்து பாண்டவா்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமாா் 15 பேருடன் பள்ளி வேன்... மேலும் பார்க்க

கொட்டங்காடு கோயிலில் கொடை விழா கொடியேற்றம்

உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா (செப்.9) தொடங்கியதையொட்டி புதன்கிழமை (செப்.10) அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலாவைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு இந்து முன்னணி வாழ்த்து!

இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்துக்கும் சங்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது!

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.வாரியாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

ஆலைகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில், சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டி: குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம்!

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம் பிடித்தன. கோவில்பட்டி செவன்த் டே... மேலும் பார்க்க