செய்திகள் :

ரூ.2.65 கோடி திட்டப் பணிகள்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தாா்

post image

கெங்கவல்லி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.65 கோடி மதிப்பீட்டில் ஆறகளூரில் முடிவுற்ற திட்டப் பணிகளை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயில் முன் பக்தா்கள் தங்குமிடம் ரூ. 40 லட்சம் செலவிலும், தலைவாசல் வி.கூட்ரோட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி நுழைவாயில் அருகே பயணியா் நிழற்கூடம் ரூ. 30 லட்சம் செலவிலும், பெரியேரி ஊராட்சியில் அம்பேத்கா் நகரில் முழுநேர நியாயவிலைக் கடை ரூ. 15 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ளது.

அதுபோல திட்டச்சேரி ஊராட்சி நல்லூா் கிராமத்தில் பெரம்பலூா் பிரதான சாலையில் பகுதிநேர நியாயவிலைக் கடை ரூ. 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கட்டடங்களைத் திறந்துவைத்தாா்.

இதில் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், கெங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி, ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், தலைவாசல் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், பொருளாளா் ஜெகதீசன், ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதையடுத்து தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆறகளூா் காமநாதேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோயில் சாா்பில் கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் காலபைரவருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவசத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினாா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க