செய்திகள் :

ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருகக் கொம்புகள் பறிமுதல்! 4 பேர் கைது!

post image

புது தில்லியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை பதுக்கிய 4 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அம்மாநிலக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.9 அன்று லாக்பட் நகர் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை வாங்கும் வாடிக்கையாளரைப்போல ஒரு கான்ஸ்டெபிள் சென்றுள்ளார். கடத்தல் காரர்களுடன் அதன் விலையை பேரம் பேசி ரூ.1 கோடி என முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த கொம்பை கைமாற்ற அவர்கள் தயாரானபோது கடத்தல்காரர்களின் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த சோதனையில் வெள்ளை காண்டாமிருகத்தின் 2 கொம்புகளை அவர்கள் விற்பதற்காக கடத்தி பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க:சிங்கப்பூர் அதிபர் முதல்முறையாக இந்தியா வருகை!

இதனைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய உத்தம் நகர் பகுதி குடியிருப்புவாசிகளான தீபக் சர்மா (வயது 57), சண்ட் ராம் (57), சுரேஷ் குமார் (57) மற்றும் அனில் குமார் சேதி (60) ஆகிய 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்களிடம் அதற்கு சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட காண்டாமிருக்கத்தின் கொம்புகளுக்கு சர்வதேச சந்தையில் ரூ.3 கோடி அளவிலான மதிப்புள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு ! சர்ச்சைப் பேச்சு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமணத் தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அம்மாநில பாஜக அரசின் பிராமண நலவாரியத் தலைவர் பேசியுள்ளார்.இந்தூரில் ந... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: அரசு ஊழியர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் மாநில அரசு ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.போகாரோ மாவட்டத்தின் மதுகார்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிண்டு நாயக் (வயது 26) ... மேலும் பார்க்க

நாளைமுதல் 4 நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜன. 14-17 வரை மாற்றப்பட்டுள்ளது.இது பற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணைய... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: சிறிய ரக விமானம் விபத்து! விமானி பலி!

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளனதில் அதனை ஓட்டி வந்த விமானி பலியானார்.அந்நாட்டின் டார்வின் மாகாணத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள மறுசீரமைப்புப் பகுதியின் வானில் நேற... மேலும் பார்க்க

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருத... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.அம்மாநிலத்தின் மாவோயிஸ்டு அமைப்பின் பிரிவுக் குழு உற... மேலும் பார்க்க