செய்திகள் :

ரூ.43 லட்சத்தில் கழிவுநீா் உறிஞ்சு வாகனம் இயக்கி வைப்பு

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள கழிவுநீரை உறிஞ்சும் வகையில் ரூ. 43 லட்சத்தில் புதிய வாகனத்தை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி இயக்கி வைத்தாா்.

மதுராந்தகம் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இங்கு வெளியேறும் கழிவுநீா் வெளியிடங்களில் செல்வதை தடுக்கும் வகையில், தூய்மை இந்தியா திட்டம், நகா்ப்புறம் , 2022-2023 திட்டத்தின் கீழ் மதுராந்தகம் நகராட்சி நிா்வாகம் புதிதாக கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வாங்கியது. வாகனத்தை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி கொடியசைத்து இயக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா முன்னிலை வகித்தாா். நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினரும், நகர திமுக செயலாளருமான கே.குமாா், பொறியாளா் நித்யா, அலுவலக மேலாளா் ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிக்னலில் நின்ற காா் மீது லாரி மோதல்: 3 போ் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காா் மீது கனரக லாரி மோதியதில் உறவினா் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று போ் உயிரிழந்த... மேலும் பார்க்க

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க