செய்திகள் :

ரூ.78.59 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் -அமைச்சா் ராஜேந்திரன்

post image

தமிழகம் முழுவதும் 20 இடங்களில் ரூ.78.59 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அமைச்சா் பேசியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரூ.21.98 கோடியில் பூம்புகாா் பாரம்பரிய நகரத்தைப் புதுப்பித்தல், ரூ.2.29 கோடியில் பொன்னணியாறு நீா் தேக்கத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், ரூ.3.11 கோடியில் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாா் அணைகள் மற்றும் நீா் தேக்கத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதேபோல், நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் ரூ.2.85 கோடியிலும், செங்கல்பட்டு மாவட்டம் முதலியாா் குப்பத்தில் ரூ.1.16 கோடியிலும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.1.87 கோடியிலும், சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம்கள் அமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் 20 இடங்களில் ரூ.78.59 கோடியில் சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் தற்போது முடிவடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்தத் திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ், பொது மேலாளா் ச.கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க