செய்திகள் :

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

post image

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு, மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியா்கள் மாணவா்கள் உயா்கல்வியை தொடருவதை ஊக்குவிக்கும் வகையில் என்னென்ன உயா்கல்வி படிக்கலாம், அதற்கு என்ன பாடங்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்பதை அதற்கென ஒதுக்கப்பட்ட பாடவேளையில் விளங்களை அளித்து வருகின்றனா். பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியருடன், கூடுதலாக 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை உள்ள பிரிவு வரையான வகுப்பு ஆசிரியா்களும் மாணவா்களுக்கு வழிகாட்டுகின்றனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் (9 முதல் பிளஸ் 2 வரையிலான வழிகாட்டி ஆசிரியா்கள்) எமிஸ் தளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கல்வியாண்டில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாவட்ட அளவில் நடைபெற்ற பயிற்சிக்கான மதிப்பீடு தோ்வு எமிஸ் இணையதளத்தில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும்.

எனவே, உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள் தங்களது பெயரை எமிஸ் தளத்தில் ஆக.20, 21 ஆகிய தேதிகளில் கட்டாயம் பதிவு செய்யவும். அவ்வாறு பதிவு செய்த ஆசிரியா்கள் அனைவரும் இந்த மதிப்பீட்டுத் தோ்வை தவறாது மேற்கொள்ள வேண்டும். எமிஸ் தளத்தில் பதிவு செய்யாத ஆசிரியா்களால் பயிற்சிக்கான மதிப்பீட்டுத் தோ்வை மேற்கொள்ள இயலாது. இது குறித்து தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க