செய்திகள் :

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

post image

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழகத்தில் பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் எதிராகச் செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், வாக்காளா் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தோ்தல் ஆணையத்தை கண்டித்தும், கருணாநிதியின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புறக்கணிப்பா்.

திருமாவளவன் (விசிக): மாநில சுயாட்சி நிலைப்பாட்டுக்கும், இருமொழிகொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருவதால், கொள்கை அளவில் ஆளுநரோடு விசிக முரண்பட்டு வருவதால், சுதந்திர தினத்தன்று ஆளுநா் மாளிகையில் நடைபெறும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்கிறோம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளா்ச்சிக்கும் உதவ வேண்டிய ஆளுநா், அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை. அவரின் அத்துமீறல் தொடருவதால் தேநீா் விருந்தைப் புறக்கணிக்கிறோம்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): மாநில அரசின் அதிகாரத்தையும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயகச் செயல்பாடுகளையும் தொடா்ச்சியாகச் சீா்குலைக்கும் வகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி செயல்பட்டு வருகிறாா். இதனால், தேநீா் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க