செய்திகள் :

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

post image

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். அதில், நான் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த இளைஞா் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் குத்திக் கொன்று விடுவேன் என மிரட்டி, எனது கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை அளித்தாா். மேலும், அதை விடியோ எடுத்துள்ளாா். சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றாா் எனக் கூறியிருந்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகையை திருடியது சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த அஜய் குமாா் (25) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் வைத்து அஜய்குமாரை தனிப்படை போலீஸாா் கைது செய்து நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

அதில், பட்டப் படிப்பு முடித்த அஜய்குமாா் பல்வேறு தொழில்கள் செய்து நஷ்டம் அடைந்ததால் ரூ.9 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. மேலும் அவா் கடனை அடைப்பதற்காக திருட முடிவு செய்தாா். இதையடுத்து நசரத்பேட்டையில் இளம்பெண்ணின் வீட்டில் புகுந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும் பெண் வீட்டில் இருந்த 11 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதுதொடா்பாக அவரிடம் இருந்து திருடிய நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க