செய்திகள் :

ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

post image

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரியாபாந்து மாவட்டத்தில் மோட்டிபானி கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று (மே.2) மாலை நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஈ-30 படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் முடிவடைந்த பின்னர் நக்சல்கள் பதுங்கியிருந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, தாக்குதலில் பலியான நக்சல் ஒருவரின் இறந்த உடல் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அங்கிருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பலியானது ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த யோகேஷ் எனவும் அவர் நக்சல் அமைப்பின் மண்டல ஆணைய உறுப்பினராகச் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சத்தீஸ்கரில் 2025-ம் ஆண்டு துவங்கியதிலிருந்து சுமார் 145 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?

இந்தியர்களின் காலை பெரும்பாலும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் பற்றிய செய்தியுடன்தான் விடிந்திருக்கும். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புப் படையின் இரு பெண் அதிகாரிகள் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாதுகாப்புப் படையில் இரு பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நேரலை

அமைச்சரவைக் கூட்டம்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைத் தளபத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மத்திய வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்!

இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்! - அமித் ஷா

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் எவை?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தா... மேலும் பார்க்க