செய்திகள் :

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! ஆனால்?

post image

11 மாதங்களுக்கு ரூ.895 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

டேட்டா அதிகம் தேவையில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் 11 மாதத்துக்கு ரூ.895 ரீசார்ஜ் திட்டம் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அளவில்லா அழைப்பு மற்றும் 24 ஜிபி டேட்டா வசதியுடன் 11 மாதத்துக்கு ரூ.895 ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தற்போதிருக்கும் திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 28 நாள்களுக்கு வெறும் 80 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் அளவுக்குத்தான் வருகிறது.

ஆனால், இந்த திட்டம் ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன் வைத்திருப்பவர்களுக்குத்தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒருவேளை எதிர்காலத்தில் போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த ஜியோ ஃபீச்சர் போன்களை வாங்கி, இந்த ரீசார்ஜ் வாய்ப்பைப் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்றுமதியில் ரூ.100 கோடி ஜிஎஸ்டி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை!

ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டு அதன்மூலம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து கடந்த 2022 - 23 காலகட்... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க