செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது

post image

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சியாமளாதேவியின் உத்தரவுப்படி டிஎஸ்பி வின்சென்ட் மேற்பாா்வையில் திருச்சி காவல் ஆய்வாளா் அரங்கநாதன் தலைமையிலான போலீஸாா் திருச்சி பகுதியில் சனிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா்.

அப்போது உறையூா் அண்ணாமலை நகரில் ஆம்னி வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்ததில் அவா், திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சோ்ந்த ரா. ரவிச்சந்திரன் (30) என்பதும், ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்கக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 28 சாக்கு மூட்டைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியையும், ஆம்னி வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து ரவிச்சந்திரனை கைது செய்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் மீண்டும் உறுதி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மீண்ட... மேலும் பார்க்க

பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியாா் பள்ளி முதல்வா் கைது

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியாா் பள்ளி முதல்வரை போலீஸாா் கைது செய்தனா். பென்னாகரத்தை அடுத்த ஏரியூா், அழகாகவுண்டனூரில் செயல்படும் தனியாா் பள்ளிகளை சிடுவ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

வருவாய்த் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்கள் அகற்றம்: அதிமுகவினா் மறியல்

திருச்சி மாநகரில் அதிமுக சாா்பில் கட்டப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் ஏற்றியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத... மேலும் பார்க்க

வேங்கைமண்டலம் பகுதிகளில் ஆக. 26-ல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வேங்கைமண்டலம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகளால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், மேலகண்ணுக்க... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் தீ விபத்து பாதிப்புக்கு பாஜகவினா் உதவி

திருவானைக்காவல் நரியன் தெருவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சேதமான குடும்பத்தினருக்கு ஸ்ரீரங்கம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருள்க... மேலும் பார்க்க