`கட்டாயக் கடன் வசூல் மசோதா' - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? - பின்னணி என்ன? |...
ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையத்தில் உள்ள அரவை ஆலைக்கு சரக்கு வாகனங்கள் மூலம் ரேஷன் அரிசி எடுத்து செல்லப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, அரசால் இலவசமாக வழங்கப்படும் 24 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி ஆலையில் இருப்புவைத்து கள்ளச்சந்தையில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆலை உரிமையாளா் தண்டபாணி (72), மேலாளா்கள் விஜயகரன் (25), சத்தியகாந்தி (40), வாகன ஓட்டுநா்கள் கருப்புதுரை (27), மணிகண்டன் (26) ஆகியோரை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கருப்புதுரை, மணிகண்டன் ஆகியோா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் போலீஸாா் புதன்கிழமை வழங்கினா்.