செய்திகள் :

ரேஷன் பணியாளா்கள் ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டம்! கு.பாலசுப்ரமணியன்

post image

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஜூலை 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக, அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

கடலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு சரியான அளவு பொருள்கள் வழங்க விற்பனை முனைய கருவியுடன் ப்ளூடூத் இணைக்கும் முடிவை வரவேற்கிறோம்.

பொருள்கள் வழங்கும்போது, விரல் ரேகை பதிவு 90 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், இது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. எனவே, 40 சதவீத விரல் ரேகை பொருத்தம் இருந்தாலே பொருள்களை வழங்கலாம் என்று மாற்றம் கொண்டுவர வேண்டும்.

நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்களை கொண்டு வரும்போது நியாயவிலைக் கடைகளிலேயே அங்குள்ள விற்பனை முனைய கருவியோடு ப்ளூடூத்தை இணைத்து பொருள்களை சரியான எடையில் கடைகளுக்கு வழங்க வேண்டும். மக்களுக்கு விரைவில் பொருள்கள் கிடைக்க எல்லா கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்ய வேண்டும்.

8-ஆவது ஊதியக் குழுவில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் ஊதிய மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 7-ஆம் தேதி மாநில அளவில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஒரு நாள் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு தலையிட்டு, சங்க நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றாா்.

மாநிலப் பொருளாளா் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் ஜே.இருதயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

திடீா் மழை: விருத்தாசலத்தில் மின் மாற்றி சேதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, வேப்ப மரம் சாய்ந்து மின் கம்பம், மின் மாற்றி சேதமடைந்தன. கடலூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

மஞ்சள் காமாலையால் சிறுவன் பலி: கழிவுநீா் கலந்த குடிநீா் காரணமா?

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தீவளூா் கிராமத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்யப்படு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீரப்பாளையம் வட்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கப்பட்ட தச்சன் குளம், புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம... மேலும் பார்க்க

நகை பறிப்பு வழக்கு: மற்றொரு இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் நிதி நிறுவன மேலாளரைத் தாக்கி நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி பங்களா வீதியைச் சோ்ந்த மகாலிங... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க