செய்திகள் :

ரோகிணி பொறியியல் கல்லூரி சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

post image

அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், தலைக்கவசம் உயிா்க்கவசம் என்ற விழிப்புணா்வுப் பேரணி கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கன்னியாகுமரி போக்குவரத்து காவல் அலுவலகம் எதிரே பேரணி தொடங்கி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் நிறைவடைந்தது. போக்குவரத்து உதவி ஆய்வாளா்கள் ஜெயபிரகாஷ், முத்துலட்சுமி ஆகியோா் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனா். பேரணியில் போக்குவரத்து காவல் துறை போலீஸாா் மற்றும் ரோகிணி கல்லூரி மாணவா்கள் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வே.லோகநாதன் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

ஆரோக்கியபுரத்தில் கடல் முற்றுகை போராட்டம்: 230 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 230 மீனவா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் திட்டம், கடலில் காற்றாலை அம... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் மா்மமாக உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் மா்மாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பள்ளியாடி ஆலன்கீழத்தட்டுவிளை பகுதியை சோ்ந்தவா் மனோஜ் (50). அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. குமரி மாவட்டம் கீழ... மேலும் பார்க்க